வியாழன், 20 மே, 2010

திருமணங்கள் கட்டாயப் பதிவுச் சட்டம் - மத உரிமையும் மனித உரிமையும்

முகப்பு மண்மொழி ஜனவரி10

இராசேந்திர சோழன் செவ்வாய், 16 மார்ச் 2010 22:39 தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்துத் திருமணங்களையும் கட்டாயம் பதிவு செய்யவேண்டும் என்று கடந்த நவம்பர் 24ஆம் நாள் தமிழக அரசு பிறப்பித்த ஓர் ஆணை இசுலாமிய மதவாதிகள் மத்தியில் எதிர்ப்பைக் கிளப்பியுள்ளது, இதே போலவே இதற்கு முன் கடந்த அக்டோபர் 25ஆம் நாள் தில்லி உச்ச நீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பில், நாட்டில் நடைபெறும் திருமணங்கள் அனைத்தையும் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்று அறிவித்திருந்த ஓர் ஆணையும் இசுலாமிய மதவாதிகள் மத்தியில் எதிர்ப்பைக் கிளப்பியிருக்கிறது. இவ்வெதிர்ப்புக்கு இவர்கள் சொல்லும் ஒரே காரணம் ‘‘எங்கள் மதத்திற்கென்று தனியாக ‘ஷரியத்’ சட்டம் இருக்கிறது. அதற்குத்தான் நாங்கள் கட்டுப்பட்டவர்களே தவிர, நாட்டிலுள்ள பிற சட்டங்களுக்கு அல்ல. அப்படி எங்களைக் கட்டுப்படுத்த முயல்வது எங்கள் மத உரிமையைப் பறிப்பதாக, எங்கள் மதத்தை அவமானப்படுத்து வதாக உள்ளது என்பதுதான்’’ இந் நிலையில் இது குறித்து நமது சிந்தனைக்காகவும் விவாதத்திற்காகவும் சனநாயக மற்றும் மனித உரிமை நோக்கில் சில கருத்துகள்.

நாட்டில் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டவும் சமூக அமைதியைப் பாதுகாக்கவும் குற்றச் செயல்களை வகைப்படுத்தி. அவற்றிற்கான தண்டனைகளை வழங்கும் வகையில் பெரும் மற்றும் சிறு சட்டங்கள் நாட்டில் பல இருக்கின்றன. இவை அனைத்து மக்களுக்கும், அனைத்து மதத்தினருக்கும் பொதுவானவை. அனைத்து சமூகப் பிரிவினரையும் கட்டுப்படுத்து பவை. இதில் போய் நாங்கள் சிறுபான்மை இனம் அல்லது சிறுபான்மை மதம் என்பதன் பேரால் விலக்கு கோர முடியாது. சலுகை கோரவும் முடியாது.

ஆனால், நாட்டு மக்களின் குடும்ப உறவுகள் மற்றும் பண்பாடு சார்ந்த சட்டங்கள் என்பவை இப்படி அனைத்து மக்களுக்கும் பொது வானதாக இல்லை. காரணம் பல்வேறு இனம், மதம் சார்ந்து சமூகத்தின் பல்வேறு மக்கள் பிரிவினரிடையேயும், பல்வேறு பழக்க வழக்கங்கள், மரபுகள் நிலவுவதால், அவரவர் தனித் தன்மை யையும் அடையாளத்தையும் பாது காக்கக் கூடிய வகையிலேயே இவை வெவ்வேறாக நிலவுகின்றன. குறிப் பாக குடும்ப உறவுகள் சொத்துரிமை, மண வாழ்க்கை, மண விலக்கு, மறு மணம் முதலானவை சார்ந்த சட்டங்கள் ஒவ்வொரு மதத்தினருக்கும் தனித் தனியாகவே இருக்கின்றன.

வெள்ளை ஆதிக்கம் இந்திய மண்ணில் காலூன்றிய போது இங்கு நிலவிய மதங்கள் சைவம், வைணவம், சமணம், பௌத்தம், பார்சி, சீக்கியம், இசுலாமியம் மற்றும் தங்கள் ஐரோப்பிய மண்ணிலிருந்து கொண்டு வந்த கிறித்துவம் எனப் பலதரப்பட்டு இருந்தன. 1860இல் வெள்ளை ஆட்சி கொண்டுவந்த ‘இந்திய தண்டனைச் சட்டம்’ இவ்வனைத்து மதங்களுக்கும் பொதுவானதாகவே இருந்தது. எனில், திருமண உறவுகள் மற்றும் பண்பாடு பழக்க வழக்கங்கள் சார்ந்து இயற்றப் பட்ட சட்டங்கள் மட்டும் வெவ் வேறாக இருந்தன.

காட்டாக, ஐனேயைn ஊhசளைவயைn ஆயசசயைபந ஹஉவ 1872, னுiஎடிசஉந ஹஉவ 1869, ஆயசசயைபந ஏயடனையவiடிn ஹஉவ 1892, ஞயசளi ஆயசசயைபந யனே னுiஎடிசஉந ஹஉவ 1936, ஆரளடiஅ ஞநசளடியேட டுயற (ளுhயசயைவ) ஹயீயீடiஉயவiடிn ஹஉவ 1937, னுளைளடிடரவiடிn டிக ஆரளடiஅ ஆயசசயைபந ஹஉவ 1939, ஹயேனே ஆயசசயைபந ஹஉவ 1909, ஹசலய ஆயசசயைபந ஏயடனையவiடிn ஹஉவ 1937 எனப் பல சட்டங்கள் ஒவ்வொரு மதத்தினர்க்கும் தனித் தனியாக நிலவின. எனினும் மேலே குறிப்பிட்ட மதத்தவர் அல்லாத பிற மதம் சார்ந்த மக்களுக்கு இப்படிப் பட்ட சட்டங்கள் ஏதும் இல்லை என்பதும் அவர்கள் மரபு வழியாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்த எழுதப் படாத பல சட்டங்களை பின்பற்றியே வாழ்ந்தார்கள் என்பதும் நோக்கத் தக்கது.

எனில், பின்னாளில் வெள்ளை ஆட்சி இவ்வனைத்து மக்கள் பிரிவினரையும் ஒன்றிணைத்து அவர்களுக்கு இந்துக்கள் எனப் பெயரிட இவர்களுக்கான தனிச் சட்டம், சுதந்திர இந்தியா வில் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகே 1955இல் உருவாக்கப்பட்டது. இதுவே இந்து திருமணச் சட்டம் 1955 எனப்படுகிறது. இது இதற்கு முன் நிலவிய எழுதப்படாத பல சட்டங்களை, குறிப்பாக வேதங்கள், ஸ்மிருதிகளை அடிப்படையாகக் கொண்டு அமைந்தது. ஆக இவ்வாறாகவே நாட்டில் இந்துக்கள், இசுலாமியர், கிறித்துவர் என அந்தந்த மதத்தினர்க்கும் தனித்தனியாக சட்டங்கள் உருவாக்கப்பட்டு நிலவி வருகின்றன.

இவற்றுள் நாம் கவனிக்க வேண்டுவது இசுலாமிய மதம் சார்ந்த சட்டங்கள் இன்றைக்கு சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பும், கிறித்துவ மதம் சார்ந்த சட்டங்கள் இன்றைக்கு சுமார் 120 ஆண்டுகளுக்கு முன்பும் வெள்ளை ஆட்சியால் உருவாக்கப் பட்டு, சுதந்திர இந்தியாவிலும் அவை எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே நீடித்து வருகின்றன. ஆனால் 1955இல் கொண்டு வரப்பட்ட இந்து திருமணச் சட்டம், ஏற்கெனவே நிலவிய பல எழுதப்படாத சட்டங்களை, வேதங்கள். ஸ்மிருதிகளிலிருந்து தொகுத்த அதே வேளை இந்து சமூகத்தில் அவ்வப்போது எழுந்த பல சீர்திருத்தங்கள் மாற்றங்களைக் கருத்தில் கொண்டு அவற்றை உள்ளடக்கி உருவாக்கப்பட்டதுடன் தொடர்ந்தும் சமூகத்தில் ஏற்பட்டு வரும் சனநாயக சிந்தனைகளுக்கேற்ப தன்னை மாற்றங்களுக்கு உட்படுத் தியும் வருகிறது. அதாவது சுருக்கமாக இந்து மதம் மட்டும் காலத்திற்குக் காலம் ஏற்பட்டு வரும் மாற்றங்களை உள்வாங்கி தன்னை மாற்றிக்கொண்டு வர, இசுலாம், கிறித்துவ மதங்கள் மட்டும் தம்மை எந்த மாற்றத்திற்கும் உட்படுத்திக் கொள்ளாமல் இன்னமும் அப்படியே பழமைவாதப் போக்கிலேயே இருந்து வருகின்றன என்பதுதான்.

காட்டாக, சுதந்திரத்திற்கு முந்தைய வெள்ளை ஆட்சியில் இந்துக்களிடையே நிலவிய சதி என்னும் உடன்கட்டை ஏறும் வழக்கத்தை ஒழிக்க ளுயவi சுநபரடயவiடிn ஹஉவ 1829, மரபு வழி சாரா திருமணங்களை அங்கீகரிக்க ளுயீநஉயைட ஆயசசயைபந ஹஉவ 1872, கணவனை இழந்த கைம்பெண்கள் காலம் முழுவதும் விதவையாக வாழவேண்டும் என்கிற நிலையை மாற்றி கைம்பெண்களும் மறுமணம் செய்துகொள்ள வழி வகுக்கும் ழiனேர றுனைடிற சுநஅயசசயைபந ஹஉவ 1856, குழந்தைத் திருமணத்தைத் தடை செய்ய ஹபந டிக ஊடிளேநவே ஹஉவ 1891, குடும்ப உறுப்பினர்களின் சொத்துரிமையைப் பாதுகாக்க ஐனேயைn ளுரஉஉநளளiடிn ஹஉவ 1925 எனப் பலச் சட்டங்கள் கொண்டு வரப்பட்ட துடன், சுதந்திர இந்தியாவிலும் காலத்திற்குக் காலம் ஏற்பட்டு வரும் மாற்றங்களைக் கருத்தில் கொண்டு ஏற்கெனவே நிலவி வரும் சட்டங் களுக்கு மாற்றாகவோ, அல்லது புதிதாகவோ பல சட்டங்கள் இயற்றப்பட்டு வருகின்றன. ழiனேர ஆயசசயைபந ஹஉவ 1955, ளுயீநஉயைட ஆயசசயைபந ஹஉவ 1954, ழiனேர ஹனடியீவiடிn யனே ஆயiவேநயேnஉந ஹஉவ 1956, ழiனேர ளுரஉஉநளளiடிn ஹஉவ 1956, ழiனேர ஆinடிசவைல யனே ழுரயசனயைளோiயீ ஹஉவ 1956 ஆகியன இப்படிப்பட்டவை. எனில், இசுலாமிய கிறித்துவ மதங்களில் மட்டும் இப்படிப்பட்ட புதிய சட்டங்களோ அல்லது பழைய சட்டங்களுக்கு மாற்று சட்டங்களோ ஏதும் இயற்றப்படவில்லை.

இப்படி இந்து மதத்தில் சாத்தியப்பட்ட இந்த மாற்றம், பிற மதங்களில் ஏற்பட இயலாமல் போனதற்கு ஒரே முக்கிய அடிப்படை காரணம், இசுலாமியர்களுக்கு குரான் போல, கிறித்துவர்களுக்கு விவிலியம் போல இறுகி கெட்டித் தட்டிப்போன எந்த நூலும் இந்துக்களுக்கு இல்லை என்பதுதான். அதாவது இந்து மதம் என்பது வேதங்கள், உபநிடதங்கள், ஸ்மிருதிகள், புராணங்கள், இதிகாசங்கள் வழி கட்டமைக்கப்பட்டதுதான் என்றாலும் அவை எந்த நாளிலும் அப்படியே மாற்றப்படாத ஒன்றாய் இந்து மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு, பின்பற்றப்பட்டு வந்ததில்லை. மாறாக காலத்திற்குக் காலம் ஏற்பட்டு வரும் மாற்றங்களைக் கருத்தில் கொண்டு அது தன்னை மாற்றம் செய்து கொண்டே வருகிறது.

ஆனால், இசுலாமியம், கிறித்துவம் என்பவை இப்படியில்லை. இதில் ‘குரான்’ இருக்கிறது. ‘விவிலியம்’ இருக்கிறது. ஆகவே, இம்மதவாதிகள் பலரும் எங்களுக்கு உரிய எல்லாம் இதிலேயே சொல்லப்பட்டிருக்கிறது. எனவே இதைத் தாண்டி புதியதாக வேறொன்றும் வேண்டியதில்லை. வேறெந்தச் சட்டமும் எங்களைக் கட்டுப்படுத்தவும் தேவையில்லை என்கின்றனர்.

இந்நிலையில் நாம் இவர்களுக்குச் சொல்ல விரும்புவது இதுதான். இசுலாமியர்களோ, கிறித்துவர்களோ, இந்துக்களோ எவரானாலும், அவர்கள் உலகின் எந்தப் பகுதியில் வாழ்பவர்களானாலும் அவரவரும் அந்தந்த நாட்டின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டவர்கள். இப்படி உட்பட்டேதான் அவரவரும் வாழ்ந்து வருகின்றனர். அதேபோலவே இந்திய ஆட்சிப் பரப்பிலும் வாழும் எம் மதத்தினரும் இந்த நாட்டில் நிலவும் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே வாழவேண்டும். வாழக் கடமைப் பட்டவர்கள்.

இதில் பல்வேறு உரிமைகள் நோக்கில் இச்சட்டத்தை எதிர்த்துப் போராடுவதோ அல்லது சிறுபான்மை இனங்கள், மதங்கள் தங்கள் தனித் துவம், அடையாளம் காக்க சில சலுகைகள் பெறுவது என்பதோ வேறு செய்தி. ஆனால் இச்சலுகைகள் எதுவும் சனநாயகத்திற்கு உலை வைப்பதாகவோ, தனி மனித சுதந் திரத்தைப் பறிப்பதாகவோ, மனித உரிமைகளை மீறுவதாகவோ அமைந்து விடக் கூடாது என்பது பொது நியதி, எனவே இந்தப் பொது நியதியைக் காப்பதில் அனைத்து மதத்தினரும் பெருந்தன்மையோடும், பக்குவத்தோடும், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையோடும் நடந்து கொள்ளவேண்டும்.

நாட்டில் நடைபெறும் திருமணங்கள் அனைத்தையும் கட்டாயம் பதிவு செய்யவேண்டும் என தில்லி உச்ச நீதிமன்றமும் தமிழக அரசும் ஆணையிட்டிருப்பதன் நோக்கம் எந்த மதத்தவரையும் புண்படுத்துவதோ, அவமதிப்பதோ, அவர்கள் மத உரிமைகளில் தலையிடுவதோ அல்ல. மாறாக ஒருவனுக்கும் ஒருத்திக்கும் திருமணம் என்பதன் பேரால் ஏற்படும் வாழ்க்கை ஒப்பந்தம் இருவருக்கும் சட்டபூர்வமானதாக, இருவரில் எவர் பாதிக்கப்பட்டாலும் அவருக்குப் பாதுகாப்பு அளிப்பதாக, நியாயம் வழங்குவதாக இருக்க வேண்டும் என்பதுதானே தவிர வேறு அல்ல.

இந்து, கிறித்துவ மதங்களை ஒப்பு நோக்க, இசுலாமிய மதத்திலேயே பெண்ணடிமைத் தனம் மிகுதி என்பதும், இம்மதத்திலேயே பெண்கள் அதிகம் ஒடுக்கப்படுகிறார்கள் என்பதும், இசுலாமிய மதத்தில் உள்ள சனநாயக சக்திகளாலே ஏற்றுக் கொள்ளப்பட்டதொரு உண்மை. இப்படிப்பட்ட நிலையில், பாதிப்புக்குள்ளா கிறவர்களைப் பாதுகாப்பதும், அவர்களுக்கு நியாயம் வழங்குவதும் அரசின், ஆட்சியாளர்களின், நீதிமன்றங்களின் கடமை. இந்தக் கடமையின் தேவையிலிருந்தே கட்டாயத் திருமணப் பதிவு குறித்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது
ஆனால், நாட்டில் உள்ள வேறு எந்த மதத்தினரும் இதை எதிர்க்காத நிலையில் இசுலாமிய மதத் தலைவர்கள் மட்டும் இதை எதிர்த்துள்ளனர். பிற எல்லா மதத்தவரையும் போல இன்றுள்ள நவீன வாழ்க்கை வசதிகளை, அறிவியல் முன்னேற்றங்களையெல்லாம் அனுபவித்துக் கொண்டு, 1200 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட குரானை, இன்றைக்கும் அப்படியே வரி பிசகாமல் பின்பற்றிக் கொண்டு வாழ முடியுமா, வாழ முயல்வது நியாயமா என்பதை இசுலாமியர்கள் சிந்திக்க வேண்டும். ஆதிக்க மதமும் அடிமைப்பட்ட மதமும் மோதும் போது அடிமைப்பட்ட மதத்தின் பக்கம் நிற்பது நியாயமானதுதான். ஆனால் மத உரிமையும், மனித உரிமையும் மோதும்போது மனித உரிமையின் பக்கம் நிற்பதே நியாயமானது. இந்த நியாயத்தை இசுலாமியர்கள் உணரவேண்டும். கட்டாயத் திருமணப் பதிவு ஆணையை எதிர்ப்பின்றி ஏற்கவேண்டும்.

தாகம் sirukathai

சிறுகதை
தாகம்
- சாங்கியன்
வண்டி ஒரு பத்து நிமிஷம் நிக்கும் டீ, காபி சாப்புட்றவங்கள்லாம் சாப்புடலம்”
நல்ல நண்பகல் வெய்யில். இந்த நேரம் பயணிகள் டீ, காபி சாப்பிடுகிறார்களோ இல்லையோ உணவு விடுதிப் பையன் பழக்கத்துக்கு ஆட்பட்டவன் போல பேருந்தின் பக்க வாட்டுகளைத் தட்டி சன்னலோரமாக சொல்லிக் கொண்டே போனான்.
பயணிகள் அவரவர் பொருட்களையும் பத்திரப்படுத்தி வைத்தோ, பக்கத்திலிருப்பவரிடம் சொல்லியோ பேருந்திலிருந்து இறங்கிக் கொண்டிருந்தார்கள். இவன் மடியில் வைத்தருந்த ரெக்சின் பையை எடுத்து சீட்டில் வைத்து முன்பின் பக்கவாட்டு இருக்கைகளைப் பார்த்தான். எல்லாம் காலியாக இருக்க கொள்ளச் சொல்ல வாய்ப்பின்றி பையைத் தோளில் மாட்டிக் கொண்டே திரும்பியவன் இருக்கையை யாராவது பறிமுதல் செய்டு விடுவார்களோ எனகால்சட்டைப் பையிலிருந்த கைக்குட்டையை எடுத்துஅடையாளமாக வைத்துவிட்டு கீழே இறங்கினான்.
கீழே புழுதி பறக்கும் மண்பரப்பில் ஏற்கெனவே வந்து நின்ற பேருந்துகள் எதிரும் புதிருமாக நிறுத்தப் பட்டிருந்தன. தள்ளி கீற்று வேய்ந்த தலைகீழ் ‘ப’வடிவில் அமைக்கப்பட்ட தனியார் உணவு விடுதி. ஒரு பக்கம் தேநீர், ஒரு பக்கம் குளம்பி, ஒரு பக்கம் மரநிழலில் இளநீர் என்ற கூட்டம் தனித்தனியாக முண்டியடிக்க வியாபாரம் பரபரத்துக்கொண்டிருக்கிறது.
சுற்றிலும் வேடிக்கை பார்த்தவாறு பேருந்து ஓரமிருந்த நிழிலில் நின்றபடியே என்ன சாப்பிடலாம் என்பவனைப் போல சிறிது நேரம் யோசனை செய்தான். வழக்கமாக இவன் தேநீர் தான் குடிப்பான் என்றாலும் இந்த முறை குளிர்பானங்கள் பக்கமாக இவன் கவனம் திரும்பியது.
இந்த குளிர்பான விளம்பரங்களை, பாட்டிலைத் திறந்ததும் நுரையோடு பொங்கி வழிகிற மாதிரி, நீச்சல் உடையில் கடற்கரையில் பெண்ணும் ஆணும் சுவைத்துப் பருகி கும்மாளம் அடிக்கிற மாதிரி, சோர்ந்து களைத்தவர்கள் இந்த பானத்தைக் குடித்து புத்தணர்ச்சி பெறுகிற மாதிரி தொலைக்காட்சியில், செய்தித் தாள்களில், இதழ்களில் இவன் பலமுறை பார்த்திருக்கிறான்.
அப்போதெல்லாம் ஒருமுறையாவது இதைக் குடித்துப் பார்த்து விட வேண்டும் என்று நினைத்ததுண்டு என்றாலும் வேலைவெட்டி எதுவுமில்லாமல் அவ்வப்போது எதற்காவது மனுப்போட வேண்டுமென்றாலே பெற்றோரிடம் காசு வாங்கி செலவு செய்து கொண்டிருக்கும் நிலையில் எங்கே 8 ரூபாய் 10 ரூபாய் கொடுத்து இதை வாங்கிக் குடிப்பது என்று அதுபற்றி பொருட்படுதயீதக் கொள்ளாமல் கடைகளில பாட்டில்களைப் பார்ப்பதோடு பேசாமல் இருந்து விடுவான்.
ஆனால் இப்போது நிலைமை அப்படியில்லை. சொந்த கிராமத்திலிருந்து ஒரு 100மைல் தள்ளியிருந்த நகரத்தில் சொற்ப சம்பளத்தில் கொஞ்சம் சுமாரான வேலை. வீட்டிற்கு கொடுக்குமளவுக்கு இல்லை என்றாலும் வீட்டை எதிர்பார்க்காமல் வாழலாம் என்கிற நிலை. முதல் மாதம் சம்பளத்தில் அம்மா அப்பாவுக்கு புடவை,வேட்டி, தங்கச்சிக்கு சுடிதார் தினபண்டங்கள் வாங்கி வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தான். இந்த ஒரு முறை இதன் ருசி எப்படியிருக்கிறது என்று குடித்து பார்க்க மட்டும் இதற்காகச் செலவு செய்வதில் தவறில்லை என்று நினைத்துக் கொண்டான்.
பாக்கெட்டிலிருந்து ஒரு பத்து ரூபாய் நோட்டை எடுத்துக்கொண்டுகிட்டே நெருங்கினான். கருப்புத் திரவம் நிரப்பியிருந்த ஒரு பாட்டிலைக் காட்டி நோட்டை வாங்கிப்போட்டு சில்லென்று ஐஸ் பெட்டியிலிருந்து பாட்டிலை எடுத்து திறந்து அதில் உறிஞ்சியைச் செறுகி நீட்டிய கடைக்காரன், வடவே தந்த மீதி சில்லரையைப் பார்த்தவனுக்குஆச்சரியமாக இருந்தது. நியாயமான மீதிக்கு மேலே சில்லரை கூடுதலாக இருப்பதைப் பார்த்து கடைக்காரன் எதுவும் ஞாபக மறதியாகத் தருகிறானோ என்று யோசித்தான். கடைக்காரனைக் கேட்பதா அல்லது கிடைத்த வரைக்கும் லாபம் என்று போட்டுக் கொளவதா என்கிற ஒரு கணம் தயங்கினான். மனச்சாட்சி இடம் கொடுப்பதாயில்லை. “என்ன கூடுதலா இருக்குது” என்றான்.
அதுவா என்று சிரித்த கடைக்காரன் சலுகை விலை. “ஸ்டாக் கிளியரன்ஸ் சேல்ஸ்” என்று சொன்னான். இவன் திகைத்து துணிமணிகள், அலங்காரப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருள்களில் தான் இப்படி இருப்பைக் காலி செய்ய தள்ளுபடிவிலையில் தருவார்கள். குளிர்பானத்தில் கூடவா இந்த விலையில் என்றால் அவ்வப்போது குடிக்கலாமே என்று மகிழ்ச்சியுடன் சில்லறையை சட்டைப் பையில்போட்டுக் கொண்டு திரும்பினான்.
சில்லென்று கையில் உறையும் பாட்டிலுடன் கூட்டத்தை விட்டு விலகி ஓரம் ஒதுங்கியவனுக்கு ஏதோ மகத்தான வாழ்க்கை லட்சியமே நிறைவேறியது போல மனதில் ஒருபெருமிதம் தோன்றியது. மெல்ல உறிஞ்சியில் உதட்டை வைத்து வாய் கொள்ளுமளவுக்கு இழுத்தான். வாய் முழுவதும் நிரம்பிய பானத்தில் சுவையும் கரியமிலா வாயுவின் இதமான நெடியும் அசாதாரண உற்சாகத்தையும், நிறைவையும் அளிக்க, அதன் சுவையை அனுபத்தைபடியே கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கி அதை உள்ளே இறங்கினான். இந்த இறக்கத்தில் இவனுக்குள் ஒரு அசாதாரண குதூகலம் தோன்றியது. விளம்பரங்களில் வரும் ஆடவர்கள் போலவே இவனும் அந்தக் குளிர்பானத்தைக் குடிக்கிறான். இவன் கையிலும் இக்குளிர்பானம் இருக்கிறது. இவனும் அந்தக் குளிர்பானக் கூட்டத்தில் ஒருவனாக மாறிவிட்டான். இவனுக்கு பெருமையும் சந்தோஷமும் பிடிபடவில்லை. இந்த பூரிப்பில் அடுத்த மிணறை உறிஞ்ச இவனுக்கு மனம் இடம் தரவில்லை.
கையில் குளிர்பானப் பாட்டிலோடு நிற்கும் இவனை, இந்தக் கண்கொள்ளாக் காட்சியைப் பார்த்துவைக்க இவனுக்குத் தெரிந்து அங்கு யாருமேயில்லை என்பது திடீரென்று இவனுக்கு வருத்தத்தைத் தந்தது. இவனும் இந்த குளிர்பாத்தைக் குடிக்கிறான் என்பது யாருக்குமே தெரியாமல் எந்தப் பதிவுமே இல்லாமல் போய்விடும் போலிருந்தது. இவன் இந்த குளிர்பானம் குடித்தான் என்பதற்கு எந்த சாட்சியமே இல்லாமல் போய்விடும் என்பதை நினைக்க இந்த உற்சாகமே கரைந்தது மாதிரியிருந்து. யாராவது ஊர்க்காரர்கள், தெரிந்தவர்கள், போனவர்கள், நண்பர்கள் இந்த நேரம் வந்தால் தேவலாம் என்று நினைத்தான்.
பார்க்கிறவர்கள் ஊர்போய்ச் சொன்னால் இவன் குளிர்ப்பான குடித்ததற்கு ஒரு பேறு இருக்கும். இவனும் குளிர்பானம் குடித்தான் என்று ஒரு பதிவும் இருக்கும், ஊரிலும் இவன் மதிப்பு உயரும். எல்லோரும் இவனை பெருமையோடு பார்ப்பார்கள்.
ஆனால் அப்படி எந்த முக்கியத்துவம் இல்லாமல் எல்லாம் வீணாகப் போய்விடும் போல் அல்லவா இருக்கிறது.
கையில் பிடித்த பாட்டிலுடன் ஏக்கத்தோடு சுற்று முற்றும் பார்த்தான் பிறகு பாட்டிலைப் பார்த்து ஈடுபாடு இல்லாமல் மீண்டும் ஒரு மிணறு குடித்தான். அதற்கு மேல் இவனுக்கு குடிக்கப்பிடிக்கவில்லை. இருக்கிற கொஞ்சத்தையும் குடித்து பாட்டிலை காலியாக்கிவிட்டால் அப்புறம் இவன் இந்த குளிர்பானம் குடித்ததற்கு யார்தான் சாட்சி இவனாகப் போய் தான் குளிர்பானம் குடித்ததை எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருக்க முடியுமா? சென்னால்தான் நம்புவார்களா..? வேண்டியதை வாங்கிக் கொண்டு திரும்பும் விற்பனை மையங்களில், நெருக்கமாய் அடைத்து நிற்கும் பேருந்துகளில், புதிதாக வந்து நிற்கும் பேருந்திலிருந்து இறங்கும் மனிதர்களில் இவன் தெரிந்த முகங்களுக்காகத் தேடிக் கொண்டிருந்தான்.
காத்திருப்பதில் நேரமாகி இவன் வந்த பேருந்துகிளம்பி விடப்போகிறது என்று எச்சரிக்கையுடன் அதையும் அவ்வப்போது பார்த்துக் கொண்டிருந்தவன் நம்பிக்கையிழந்து அடுத்த மணறை உறிஞ்சக் குனிந்தபோது “டாய் ரகு” என்ற குரல் கேட்டு நிமிர்ந்தான்.
பன்னிரண்டாம் வகுப்புவரை கூடப் படித்த சொந்த ஊர்க்கார நண்பன் தற்போது வெளியூரில் உயர் படிப்பு படித்துக்கொண்டிருப்பவன் இவனை மாதிரியே தோளில் மாட்டிய பையும் கையில் வெட்டி சுரண்டிப் போடப்பட்ட இளநீர்வழுக்கையுமாக நின்றான்.
நண்பனைப் பார்க்க இவனுக்குள் பிடிபடாத பெருமையும் நிறைவும் பொங்கியது. பாட்டிலை சற்று நெஞ்சு உயரத்துக்கு நண்பனுக்கு நன்கு தெரிகிற மாதிரித் தூக்கிப் பிடித்தப்படியே “நீ எங்க ஏது” என்று குசல விசாரிப்பான உரையாடலின் ஊடே சட்டென்று நண்பன் குறுக்கிட்டான்.
“ஐயய்ய... இதெல்லாமா வாங்கிக் குடிக்கிற ஏற்கெனவே இதெல்லாம் கெமிக்கலு, ஒடம்புக்குக் கெடுதி, யாரும் வாங்கிக் குடிக்காதீங்கன்னு டாக்டருக்கல்லாம் சொல்ல, இப்ப சமீபத்துல போன வாரம் வேற, இந்த குளிர்பானத்துல பயிர் பாசனங்களுக்குத் தெளிக்கிற பூச்சி மருந்தெல்லாம் வேற அளவுக்கு அதிகமா இருக்குதுன்னு ஆராய்ச்சியில சொல்லியிருக்கிறான். அதப் போய் வாங்கிக் குடிக்கிற...” என்றான்.
இவனுக்கு முகம் மாறியது. இதுவரை நிலவிய பெருமிதமெல்லாம் நொறுங்கிச் சிதறிய மாதிரியிருந்தது. நண்பன் கண்ணில் படாமலேயே இருந்திருக்கலாம் என்று தோன்றியது. என்ன செய்வது என்று புரியாது குழப்பதுடன் நிற்க நண்பன் சொன்னான்.
“குடிச்ச வரிக்கும் போதும் மொதல்ல அத கீழஊத்து. நம்ப ஊர் தண்ணிய எடுத்து நம்ப கிட்டயே விதது அவன் காசாக்கறது இல்லாம பணம் குடுத்து சூனியம் வச்சிக்கிற மாதிரி நம்பளா காசு குடுத்து வாங்கி ஏன் நாம்பளா நம் ஒடம்ப கெடுத்துக்கணும்” என்று ‘இந்தா’ என்று வழுக்கையை இவன் பக்கமாக நீட்டினான்.
முன்னாடியே குடித்துத் தொலைத்திருந்தாலும் யார் கண்ணிலும் படாமலாவது போயிருக்கும் இப்போது காசையும் அழுது பானத்தையும் குடிக்க முடியாமல் கீழே ஊற்ற நேர்ந்ததாக வருத்தப்பட்டு நின்றான்.
இவன் வந்த பேருந்தின் ஒட்டுநர் இருக்கையில் வந்து அமர்ந்து ஒலி எழுப்ப குழப்பத்துடன் நான் வந்த வண்டி எடுக்கறான். ஊர்ல வந்து பார்ப்பம்” என்று சொல்லி புறப்படயத்தனித்தவன் நண்பன் வற்புறுத்த கொஞ்சம் வழுக்கையை எடுத்து வாயில் போட்டபடியே பேருந்தை நோக்கி நடந்தான்.

சனி, 1 மே, 2010

கிட்டுதல்

(சிறுகதை)

- சாங்கியன்

நண்பரது கடிதம் வீட்டி ,ந்த அளவு பெரிய எதிர்பார்வை உண்டு பண்ணும்என்று இவன் எதிர்பார்க்கவில்லை.

நண்பர் தில்லிக்காரர். அடிக்கடி சென்னை வந்து போகக் கூடியவர். தமிழ் ஆர்வம் உள்ளவர். எப்போதாவது கவிதைகள் எழுதுவது, வானொலி தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளில் என்று இருப்பவர். சமீபத்தில் வெளி வந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொலைக்காட்சித் தொடர் ஒன்றில் ஒரு காட்சியில் அவர் மருத்து வராக நடித்திருக்கிறாராம். அநேகமாய் இந்த வாரம் அல்லது அடுத்த வாரம் ஒளிபரப்பாகலாம். அவசியம் பார்க்கவும் என்று எழுதியிருந்தார்.

கடிதத்தைப் படித்த மனைவி “கதிரவன் தொலைக்காட்சியெல்லாம் நமக்கு எங்கங்க வருது, நமக்கு வர்றது வெறும் சன், ஜெயா, விஜய், ராஜ்தான்” என்றாள்.

“கதிரவன்னா சன் டி.விதான் அததான் அப்பிடி தமிழ்ல எழுதியிருக்கிறார்” என்றான் இவன்.

“காரிக்கெழமன்னு எழுதியிருக்கறாரே, அது என்னா கெழம”

“காரிக்கெழமன்னா சனிக்கிழம. அதுகூடத் தெரியாதா ஒனக்கு. ஒண்ணொன்ணையும் ஒனக்கு வெளக்கணம்”

“ஆமா, அவரு எல்லாருக்கும் புரியறா மாதிரி எழுத வேண்டித்தான. உங்களுக்கு மட்டும் புரியறா மாதிரி எழுதிட்டா”

“கடிதம் எனக்குத்தான் எழுதியிருக்காரு. அதனாலதான் அப்படி எழுதியிருக்காரு”

“எல்லாம் உங்க ரெண்டு பேருக்கும் மட்டும் புரிஞ்சா போதும். மத்தவங்களுக்குப் புரிஞ்சா என்னா? புரியாட்டா என்ன?”

“இப்பிடி புதுசு புதுசா எதுனா வரும்போது தான் எதியும் தெரிஞ்சிக்க் முடியும். இப்ப புதுசா ரெண்டு வார்த்தகத்துக்ன இல்ல. இல்லாட்டா தெரியுமா..”

“சனிக்கெழமன்னா” என்று ஒரு கணம் யோசித்த மனைவி “இண்ணைக்கி வியாழன் நாளன்னிக்கிதான்” என்றாள். பின்பு கடிதத்தைப் பார்த்து “நண்பகல். மத்தியானமா. ஆமா. ஏதோ ஒரு சீரியல் ஓடுதுன்னு பக்கத்து ஊட்டம்மா கூடச் சொன்னாங்க. யாரு இதல்லாம் தொடர்ந்து உக்காந்து பாத்துக்னு இருக்கிறாங்க. எப்ப என்னா ஓடுதோ அப்பப்ப எதியாவது பாத்துக்க வேண்டியது. சும்மா ஒரு பெராக்குதான். இத அவசியம் பாத்துட வேண்டியது தான்” என்றாள்.

இவனும் தொலைக்காட்சித் தொடரெல்லாம் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருக்கக் கூடியவன் அல்ல. ஒரு நடுத்தரக் கிராமத்தில் குடியிருந்து கொண்டு ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் எழுத்தராகப் பணியாற்றி வருபவன் இவன். காலையில் எழுந்து செய்தித்தாள் பார்த்து, சிற்றுண்டி சாப்பிட்டு மதியத்துக்கும் எடுத்துக் கொண்டு ஒன்பதரை மணிவாக்கில் அலுவலகம் போனால் மாலை ஆறரை மணிக்கோ, ஏழுமணிக்கோ வீடுதிரும்பினால் சாப்பிட்டு முடித்து ஏதாவது சிற்றேடுகளையோ புத்தகங்களையோ எடுத்து வைத்துக் கொண்டு படிக்க உட்கார்ந்து விடுவான். இடையே செய்தி வரும் போது மட்டும் ஒரு அரைமணி நேரம். மற்றபடி தொலைக்காட்சிப் பெட்டிப் பக்கம் அதிகம் வருவதில்லை. வீட்டில் மனைவி குழந்தைகள் மட்டும், நிகழ்ச்சிகளை மாற்றி மாற்றி வைத்து அந்தந்த நேரம் எது பிடிக்கிறதோ அதை மட்டும் பார்த்து மகிழ்வார்கள். நண்பர் இவ்வளவு தூரம் மெனக் கெட்டு எழுதிவிட்ட பிறகு அதைப் பார்க்காமல் இருந்தால் சரிப்படாது. அடுத்த சந்திப்பில் நண்பர் கேட்டு அதைப் பார்க்கவில்லை என்றுசொல்வதெல்லாம் மரியாதையாக இருக்காது. ஏதாவது சாக்கு சொல்வதற்கும் மனச்சாட்சி இடம்கொடுக்காது. குறிப்பிட்ட அந்தக் காட்சியை மட்டுமாவது பார்த்து விடுவது என்ற முடிவு செய்து கொண்டான்.

சனிக்கிழமை வந்தது. மத்தியானமும் வந்தது. மனைவி அக்கம்பக்கத்து வீடுகளிலெல்லாம் தன் கணவரின் நண்பர் இன்று மத்தியானம் தொலைக்காட்சித் தொடரில் டாக்டராக வர இருப்பதைத் தண்டோரா போடாத குறையாகச் சொல்லி அவசியம் பார்க்க வேண்டும் என்ற அறிவித்திருந்தாள். தொ.கா. பெட்டி இல்லாத பக்கத்து வீட்டு அம்மாள் அவ்வப்போதைக்கு எந்த வீடு வாய்க்கிறதோ அந்தந்த வீட்டில் போய்ப் பார்த்துக் கொள்பவர். எப்போதாவது அந்த அம்மாள் சந்தர்ப்பம் தெரியாமல் உட்காந்திருப்பதைப் பார்த்து முகம் சுளிக்கும் மனைவி இன்று மத்தியானம் மட்டும் இங்கே வந்து பார்த்துக் கொள்ளும்படி சிறப்பு அனுமதி தந்திருந்தாள்.

தொடர் ஆரம்பிக்க ஒரு பத்து நிமிடம் முன்னதாகவே சமையல் கட்டிலிருந்து வெளியே வந்த மனைவி வியர்வையைத் துடைத்து ஆசுவாசப்படுத்திக் கொண்டு நிம்மதிப் பெருமூச்சு விட்டவாறே சொன்னாள்.

“எல்லா வேலையும் முடிச்சாச்சு, இன்னும் வத்தல் மட்டும் தான் பொரிக்கணம். அது சாப்டும் போது பொரிச்சிக்காலாம்னு உட்டுட்டேன். சீரியல் பாத்துட்டு அப்புறம் பாத்துக்கலாம்”

வெளி வாரந்தாவில் அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்தவன் “சரி சரி. நீ ஏன் இப்படிக் கெடந்து பறந்துக்னு இருக்க, வரும்போது பாக்கப் போறம். பாத்துட்டு சாப்டப் போறம். அதுக்கு நீ ஏன்இப்படி கெடந்து தம் கட்டுவ” என்றான்.

“உங்களுக்கென்னா சொல்லாத. ஒரு காட்சின்னா எம்மாம் நேரமோடக்குனு வந்து, டக்குனு போயி மிஸ் ஆயிடுச்சின்னு வச்சிக்கோங்க அப்பறம் என்னா பண்றது” என்றாள்.

பிறகு கொஞ்சம் யோசித்து “ஏங்க அவர் கொஞ்சம் வயசானவரா தெரிய மாட்டாரு” என்றாள்.

“ஆமா. அதுக்கென்னா. வயசானா டாக்டராவரக் கூடாதா”.

“அதுக்கில்ல. மேக்கப் எதுனா போட்டுக்னு வருவரா. இல்ல அப்படியே வருவரான்றதுக்காக கேட்டேன். ஏன்னா, மேக்கப் கீக்கப் போட்டுக்னு வந்து அடையாளம் தெரியாமப் போயிடப்போவுது”

“வயசான டாக்டர்னா அப்பிடியே வருவாரு. இல்ல இளமையான டாக்டர்னா மேக்கப் போட்டுக்னு வருவாரு. எப்படி வந்தா ஒனக்கென்னா டாக்டர்னா டாக்டர்தான்” என்றான்.

“ஒரு டாக்டர் மட்டும் வந்தா பிரச்சினஇல்ல. ரெண்டு மூ™ டாக்டரா வந்துட்டாங்கன்னா இவர எப்படி அடையாளம் கண்டு புடிக்கறதுன்ற துக்காக கேட்டேன்.”

“எல்லாம் கண்டு புடிச்சிக்லாம். கவலப்படாத என்றான்”.

அவள் நிறைவடையவில்லை முன்னதாகவே பெண்ணை மடக்கிப் போட்டவள் பையனை தேடினாள்.

“இந்த பொடி வேற எங்க போச்சின்னே தெரியல. அப்பா ஃபிரண்டு டாக்டரா வரப்போறாராம் மத்தியானத்துக்கு இருந்து பாருடான்னேன். எங்கியோ ஓடிட்டிருக்குறான் பாருங்க ஆட்டம் போடறதுக்கு” என்று சுற்றும் முற்றும் பார்த்தாள் மனைவி.

“சரி. அவன் வரும்போது வரட்டும் மணி ஆயிடுச்சி. இன்னும் கொஞ்ச நேரத்துல ஆரம்பிச்சுடுவான்”

“நீ போய் உக்காந்து பாததுக்னு இரு. ஆரம்பிக்கும் போதுசொல்லுவரேன்”.

“போன கொஞ்ச நீரத்திலீஈ மனைவி உள்ளேயிருந்து கரல் கொடுத்தாள் ஏங்க. ஆரம்பிக்கப் போறான்”.

இவன் புத்தகத்தை அடையாளமாக மூடி வைத்துவிட்டு உள்ளே போனான். மனைவியும் நான்காம் வகுப்பு படிக்கிற பெண்ணும், பக்த்து வீட்டு அம்மாளும் மிகவும் பொறுப்போடு தரையில் அமர்ந்து சின்னத் திரையை நோக்கிக் கொண்டிருந்தனர்.

திரையில் எழுந்து ஓடிக்கொண்டிருந்தது.

“அவர் போ போடறானா பாப்பம்” என்றாள் மனைவி.

“சும்மா ஒரு காட்சி வர்ரதுககெல்லாம் பேர் போடமாட்டான்”

“ஏன் போடமாட்டான் மின்ன உங்க இன்னொரு ஃபிரண்டு சேட்டு ஊட்டு வேலைக்காரன் ரோல்ல வந்து ஐயா ஊட்டுல இல்லீங்க. வெளிய போயிருக்காருன்னு சொல்லிட்டுப் போனதுக்கே பேர் போடலியா.”

“பாப்பம்.. ஒவ்வொரு இயக்குநர் ஒவ்வொரு மாதிரி. சிலர் எல்லார் பேரையும் போடணம்னு நெசப்பாங்க சிலர் முக்கியமான ரோல்ல வர்ரவங்க மட்டும் போடுவாங்க”

தொழில் நுட்பக் கலைஞர்களின் பெயர் ஓடி முடிய அப்புறம் திடீரென்று திரைக்கதை வசனம் இயக்கம்..

“நடிகர்கள் பெயரையே போடக் காணம்” என்றான்.

“ஒரு வேள மொதல்லியே போட்டுட்டானோ என்னுமோ” என்றாள் மனைவி.
“இங்கதான இருக்கற நீ பாக்கலியா..”

“ஒங்களக் கூப்டுட்டு, தோ ரசம் கடுத்துடப் போவுன்னு எறக்கி வச்சிட்டு வாரனே அதான். நான் வேற எங்க போனேன்.”

“ஆமா. போ. எல்லாம் நீ வாயலா பேசதான் லாயக்கி”

“என்னா. ரசத்த எறக்கி வச்சிட்டு வாரதுக்குள்ளவா பேரப் போடுவான்.”

“இல்ல. இல்ல. நீ எறக்கி வச்சிட்டு வர்ர வரிக்கும் நிறுத்தி வச்சிருந்துட்டு அப்பறமா போடுவான்.”

“அதற்குள் பெண், நண்பர் பெயரைச் சொல்லி அந்த மாதிரிப்பேரே எதுவும் போடலிங்கப்பா” என்றாள்.

“ஒரு வேள புனைபெயர்ல எதுனா நடிச்சிருக்கறரோ” என்றான் இவன்.

“சரி. சரி. பேசாம நாக்காலில உக்காந்து படத்தபாருங்க. பேர உட்டா மாதிரியே அவரியும் உட்டுடப் போறம். மொதல்ல எடுத்ததுமே வந்துட்டுப் பூடப் போறாரு” என்றாள் மனைவி.

“நீ சொன்னா மாதிரிதான் இருக்கும் போலருக்குது. எடுத்ததுமே பெரிய பெரிய கட்டடமா காட்டறான். ஆஸ்பத்திரி மாதிரிதான் தெரியுது. மொதல்லியே வந்துட்டார்னா பரவால்ல பாத்துட்டு போயிடலாம். பூரா சீரியலையும் பார்க்க வேண்டிய அவஸ்த இருக்காது.

“இது ஆஸ்பத்திரி இல்லிங்க. ஸ்கூலு. டீச்சரம்மா வர்றாங்க பாருங்க”
“டீச்சரம்மவா, நர்ஸா நல்ல பாரு என்று யோசனையோடு இழுதத்வன் ஆமா. ஸ்கூலுதான் பசங்கள்லாம் வருது” என்றான்.

தரையில் ஒரு குழந்தை அழுது கொண்டிருந்தது. டீச்சரம்மாவந்தார்கள். அழுகிற குழந்தையைப் பார்த்து ஏன் அழுகிறாய் என்றார்கள். வேறு ஒரு டீச்சரம்மா அடித்ததாகக் குழநதை சொல்ல. ஏன் அடித்தார்கள் என்று இந்த டீச்சரம்மா கேட்கிறார்கள். அந்த டீச்சர் அம்மா அப்பான்னு சிலேட்டுல எழுத சொன்னாங்க டீச்சர். நான் எழுதலன்னு அடிச்சிட்டாங்க. ஏன் உனக்கு எழுதத் தெரியாதா. தெரியும் டீச்சர். ஆனா எனக்கு அம்மா அப்பா யாருமே இல்ல டீச்சர் அதனால அனாதைன்னு எழுதிட்டேன் டீச்சர் என்கிறது குழந்தை. டீச்சரின் கணகள் கொப்பளிக்க என் கண்ணே என்று குழந்தையை வாரி எடுத்து அணைத்துக் கொள்கிறாள் டீச்சர். இதற்கு மேல் இந்த உணர்ச்சிப் பிழம்பைக் காணப் பொறுக்காமல் நான் வெளிய இருக்கறேன். அந்தசீன் வரும்போது கூப்டு என்று பழைய படியே வெளியே வந்து உட்கார்ந்து புத்தகத்தை விட்ட இடத்திலிருந்து ஆரம்பித்தான்.

தெருவில் எதிர்ப்புறம் ஒரு வீடு தள்ளியிருந்த பருத்தவேப்ப மரத்து நிழலில் அக்கம் பக்கத்து வீட்டுப் பிள்ளைகள் கட்டம் போட்டு சில்லு விளையாடிக் கொண்டிருந்தன. வாரம் பூராவும் வெறிச் சோடிக் கிடக்கும் வேப்பமரம் சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் வந்தால் மட்டும் களை கட்டும். அடர்ந்து ஏங்கிக் காத்துக் கிடக்கும் அந்த நிழலுக்கே அப்போது தான் ஒரு உயிர்ப்பு வந்தது மாதிரியிருக்கும். ஆடுபவர்களும், வேடிக்கை பார்ப்பவர்களுமாக இரைச்சலிட்டுக் கொண்டிருக்கும் அந்தக் குழந்தைகளையே பார்த்துக் கொண்டிருந்தான். ரெட்டை சடை போட்டு மடித்துக் கட்டியிருந்த நாலாவது வீட்டுச் சிறுமி சடை துள்ளத்துள்ள எல்லாக் கட்டங்களிலும் சில்லு போட்டுத் தெத்தித் தெத்திக் கடந்து விட்டு மலையேறிக் கொண்டிருந்தாள். நெற்றியில் சில்லை வைத்துக் கண்களை மூடி அண்ணாந்து கால்களைப் பரப்பி, சில்லு விழாமல், கீழே கோட்டை மிதிக்காமல் சரியா, சரியா என்று கேட்டவாறே கட்டங்களைக் கடந்து கொண்டிருந்தாள்.

உள்ளிலிருந்து திடீரென்று மனைவியின் அலறல் சத்தம் கேட்டது “ஏங்க சீக்கிரம் வாங்களேன்”.

சூழ்நிலையையே மறந்தவனாகப் பதறியடித்துக் கொண்டு எழுந்தான். இவன், வெளி மூலையில் எப்போதும் அவசரத்துக்குத் தயாராய் சாற்றி வைத்திருந்த நீளத்தடியோடு உள்ளே நுழைந்து “எங்க” என்றான்.

வீடு புதியதாய்க் கட்டிய வீடு. கிராமத்தின் விரிவாக்கப் பகுதியில் இவனை மாதிரி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மின் வாரியப் பணியாளர்கள் எனச் சில நடுத்தரக் குடும்பங்கள் லோன் போட்டுச் சொந்தமாய் மண் வாங்கி வீடு கட்டிக் கொண்டிருந்தார்கள். இவன் வீடு இன்னும் பூச்சு வேலை கூட முழுமையாக முடியவில்லை. சுற்றிலும் கொல்லைமேடு. செடிகொடிகள் புதர்கள் மண்டிய கரம்புகள் என்பதால் அடிக்கடி பூச்சி பொட்டு நடமாட்டங்கள் உண்டு. கோடைமுடிந்து ஆடீ மழையில் உழ ஆரம்பித்துவிட்டால் நடமாட்டம் கொஞ்சம் கூட இருக்கும் நல்லது, சாரை, விரியன், நட்டுவ்hக்களி என ஏதாவது வரும். போன வாரம் கூடப் பொழுதுபோன வேளையில் அம்மிக்கல் இடுக்கில் நல்லது ஒன்ற இருந்து அடித்தது. அப்படித்தான் ஏதோ என்று பரபரப்போடு நுழைந்து போருக்குத் தயாரானவன் போல நின்ற இவனை மனைவி வியப்போடு பார்த்து “என்னங்க” என்றாள்.

இவன் “எங்க இருக்குது” என்றான்.

மனைவி வியப்போடு “எது” என்றாள்.

“எதுவா. எதுக்கு இப்படி கத்தன...”

“ஒரு அம்மா இருமிக்னு இருந்தாங்க. டாக்டர் வந்தாலும் வருவாருன்னுதான் கூப்புட்டேன்.”

“கிழிஞ்சிது போ. அதுக்கா இப்படி கத்தன. நான் என்னுமோ ஏதோ வாங்காட்டியும்னு பயந்திட்டேன்”

“ஆமா. நீங்க எப்பவும் அதியே நெனச்சிக்னு இருங்க. எதையாவது ஒண்ணை நெனச்சிக்னு எதையவாது ஒண்ணை செய்யறதுக்கு” என்றாள் மனைவி.

பொதுவாகவே அற்ப பிஷயத்துக்கெல்லாம் கூட “ஏங்க.. ஏங்க” என்று அலறும் சுபாவமுடையவள் மனைவி. காலையில் வழக்கமாக வரும் பேப்பர்காரப் பையன் வந்து பேப்பர் போட்டுவிட்டுப்போனால் கூட அவன் ஏதோ பேட்ரோல் பாம் வீசி விட்டுப் போனது போன்ற குரலில்தான் அதை அறிவிப்புச் செய்வாள். அந்த கடுப்பில் இவன் “சும்மா ஒரு செத்த அசஞ்சா கூட நமக்கு என்னமோ மாதிரி இருக்குது. நீ என்னான்னா அது அதுக்கும் இப்படி ஊடே தூக்கிக்னு போறா மாதிரி அலறிக்னு இரு” என்றான்.

“ஆமா நீங்க ஒண்ணுகெடக்க ஒண்ணு ஏதாவது செய்துட்டு எல்லாத்துக்கு எளச்சவ நானுன்னு எம்மேல எகிர்றிங்களா. உங்க ஃபிரண்டு வருவாரேன்னு கூப்புட்டேன். நீங்க பாத்தா பாருங்க பாக்காட்டி போங்களேன். எனக்கென்னா. நாங்களா அவருக்கு பதில் சொல்லப் போறம்”

“சரி. உடு. டாக்டர் வந்தாரா இல்லியா” என்றான் இவன்.

மனைவி பதில் சொல்லுமுன்
“ஏங்க உங்களுக்கு ஒடம்பு சரியில்லையா எங்கிட்ட சொல்லவே இல்லியே” என்று எடுத்துப்போட்ட மாதிரியே கேட்டாள் பக்கத்து வீட்டு அம்மாள்.

“எனக்கு ஒடம்புக்கு ஒண்ணும் இல்லியே நல்லதான இருக்கறேன்” என்றாள் மனைவி.

"பின்ன எதுக்குடாக்டர் வரச்சொல்லி இருக்கீங்க.”

“அது இல்லீங்க. நான் சொல்லல. இவரு பிரண்டு டாக்டரா நடிச்சிருக்காருன்னு அதக் கேக்கறாரு”

“அதுவா. நீங்க மருத்துவர்னுதான சொன்னீங்க மருத்துவர்ன்னுதும் நான் நாட்டு வயித்தியர்னு நெனச்சிக்னேன்.”

“ரெண்டும் ஒண்ணுதாம் பாட்டி. இங்கிலீஷ்ல டாக்டர்னா தமிழ்ல மருத்துவர். நாம்ப எவ்வளவோ விஷயம் தமிழ்ல தெரிஞ்சிக்க வேண்டியிருக்குது”. ஏதோ பெரிய கண்டுபிடிப்பு போல சொன்னாள் மனைவி.

“நானும் அதாம்மா சொல்றேன். இங்கிலீஷ் வயித்தியம் பாத்தா டாக்டரு. தமிழ் வயித்தியம் பாத்தா மருத்துவரு” என்றாள் பக்கத்து வீட்டம்மாள்.

இதுவேறவா என்று முனகியவன் “நான் வெளிய இருக்கறேன். வந்தா சொல்லு!” என்று வராந்தாவுக்கு வந்தான்.

ரெட்டை சடைப் பெண் ஒரு கட்டத்தில் பழம் போட்டுக் கிழிந்திருந்தாள். பாப் வெட்டியமற்றொரு சிறுமி சில்லு போட்டுக் கட்டங்களைக் கடந்து மலை ஏறிக்கொண்டிருந்தாள். இவளுக்கு உள்ள சங்கடம் ரெட்டைப் பின்னல் சிறுமி பழம் போட்டு கோடு கிழித்த கட்டத்தில் கால் வைக்கக் கூடாது சில்லை நெற்றியில் ஏந்திக் கண்ணை மூடி அண்ணாந்து “ரைட்டா.. ரைட்டா..” என்று நகர அவ்வப்போது கோட்டில் கால் வைத்து “அவுட்” ஆகீக்கொண்டிருந்தாள்.
உட்புறமிருந்து நெக்ஸ்ட் கேஸ் என்கிற குரலைக் கேட்கச் சரக் கென்று நாற்காலியைப் பின்னுக்குத் தள்ளிக் கொண்டு வழுந்தான். அதற்குள் மனைவி பதறிக் கொண்டு வெளியே வந்து நின்று என்னங்க என்றாள்.
“டாக்டர் வந்துட்டாரா” என்றான்.

“வந்தா சொல்ல மாட்டனா”

“இப்ப ஏதோ நெக்ஸ்ட் கேசுன்னு கொரல் கேட்டுது”.

“அதுவா அது மருந்து விளம்பரம். விளம்பர டாக்டர்.”

“அப்படியா அதக் கேட்டதும் நான் நம்ப டாக்டர்தான் வந்துட்டாராங்காட்டியும் நெனச்சிக்னேன்.”

“அதுக்கா இப்படி நாற்காலிய டர்ர்ருனு தள்ளிக்னு எழுந்திரிப்பீங்க. நான் என்னுமோஏதோவாங் காட்டியும்னு பயந்துட்டேன்.”

“ஆமா. நீ எப்பப் பார்த்தாலும் அதியே நெனச்சின்னு இரு.”

“ம்...” என்று முறுக்கினாள் மனைவி.” இப்பிடி அமக்களம் பண்ணா யாருக்குதான் இதுவா இருக்காதாம் நான் நல்லதுதான் எவோ வந்துடுத்தாம் காட்டியும்னு நென்சிக்னு ஓடியாறேன்.”

“சரி. சரி. நீ உள்ள போயி இரு. திடீர்னு வந்துடப் போறாரு. இவ்வளோ நேரம் காத்துக்னு இருந்துட்டு கடைசில கோட்ட உட்டுடப் போறம்.”

“விளம்பரம்தான் போய்க்னு இருக்குது. வந்தா கூப்புட்றம் வாங்க” என்றாள் மனைவி. சற்று யோசித்து “இல்லண்ணா பேசாம கொஞ்ச நேரம் உள்ளதான் வந்து உக்காந்து பாததுடுங்களேன். எதுக்கு வெளில உக்காந்துக்னு இந்த மாதிரி அமக்களம் பண்ணிக்னு இருக்கீங்க..”

‘நாங்க அமக்களம் பண்றமா நீ பண்றியா.. பேசாம உள்ளபோய் உக்காந்து பாரு”
இவன் மீண்டும் புத்தகத்தைப் பிரித்து படிக்க யத்தனித்தான். மனம் வயிக்கவில்லை. சில்லு விளையாடும் குழந்தைகளையே வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தான். “ரைட்டா.. ரைட்டா” என்று கேட்டபடியே கோட்டை மிதிக்காமல மலையேறி வருகிறாள் கிராப் சிறுமி என்றாலும் பின்புறம் திரும்பிப் பார்க்காமல் எதிர்ப்பக்கம் பார்த்து அனுமானமாய் வீசச் சில்லு கோட்டில் பட்டுவிகிறது. ஏமாற்றத்தோடும சோர்வோடும் குனிந்து சில்லியை எடுத்துக் கொண்டு அடுத்தவளுக்கு வழி விட்டு நிற்கும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

கொஞ்ச நேரத்தில் தலையை அள்ளிக் கொண்டை போட்டபடி வெளியே வந்தாள் மனைவி. கூடவே கைகளை உயரே தூக்கி திமிர் விட்டபடி பெண்ணும் “போங்கப்பா வெளயாடப் போயிருந்தாலும் போயிருப்பேன்” என்றாள்.

“என்ன ஆச்சி’ என்றான்.

“முடிஞ்சி போச்சி”

“டாக்டர் வரவேயில்லியா”

“யாரோ ஒரு டாக்டரம்மாதான வந்தாங்க. டாக்டர் வரல” என்றாள் மனைவி.

“ஒரு வேள டாக்டர் இந்த வாரம் லீவு போட்டுடாரோ என்னமோஞ
“ஆமா உங்களுக்கு இந்த நெட்டுல ஒண்ணும் கொறச்சல இல்ல”.

“வரலண்ணா உடு. அடுத்த வாரம் வரப்போறாரு பாத்துக்கலாம்”

“அடுத்த வாரம் எங்க. நாம தான் சித்ரா கல்யாணத்துக்குப் போவப்போறமே. அந்த மத்தியான நேரம் எங்க இருக்கிறமோ. பெரும்பாலும் பஸ்&ல பயணத்துல இருப்பம்”

“ஆமா...” என்று அப்போதுதான் ஞாபகத்துக்கு வந்தவன் போல இழுத்தான் அவன்.

“நானும் தொடர்ந்து பாக்கறங்க, நாம எதனா பாக்கணம்னு உக்காந்தா அண்ணைக்குத்தான் சோதனையா எதுனா ஒரு வேல வரும். இல்லன்னா நிகழ்ச்சி மிஸ் ஆவும். சும்மா கெடக்கற நேரமெல்லாம் கரண்ட் இருக்கும். நாம் எதுனா பாக்கணம்னா அண்ணக்கி பாத்து கரண்ட் போவும். எததினி புரோக்ராம் இந்த மாதிரி. அன்னைக்கு ஒரு நாள் காலையில யாரோ உங்க ஃபிரண்டு கவிஞரோட பேட்டின்னீங்களே அன்னைக்கு அப்படித்தான் பேட்டின்னு அறிவிச்சான் பொசுக்குன்னு கரண்ட் போச்சு. அப்படியே தோண்டி தொலங்கி கரண்ட் இருந்தாலும் பாத்துக்னு இருக்கும் போதே பாதில நிக்கும். எத்தினி படம் பழைய படம் இந்த மாதிரி பாதில போயிருக்குது. இன்னைக்கி எல்லாம் இருந்தும் அவரக்காணம். அடுத்த வாரம் வர்ராறோ என்னுமோ அப்பிடியோ வந்தாலும் நாம் இருக்க மாட்டோம்.”

“அதுக்கென்னா பண்றது. வாழ்க்கையில எவ்வளவோ விஷயங்கள் இந்த மாதிரி. நாம்ப நெனைக்கிறது எல்லாம் மேவா நெறைவேறுது நெறைவேறின வரைக்கும் பார்த்துக்னு போவ வேண்டியதுதான்”

“அவராவது எந்த வாரம் வர்ரேன்னு கராக்டா எழுதயிருக்கலாம்”

“அவருக்கே சரியா தெரியாததுனாலதான் ரெண்டு வாரத்துல எதுனா ஒரு வாரம்னு எழுதியிருக்காரு. ஏதோ ஒரு வாய்ப்பு கெடச்சி நடச்சி இருக்கறாரு. அத நண்பர்கள் பாக்கணும்னு விரும்பி எழுதியிருக்கறார். வாய்ப்பு இருந்தா பார்க்கப் போறம். முடியலைன்னா அதக்காக என்னா பண்றது. செவுத்திலயா போய் முட்டிக்க முடியும்..”

“அக்கம் பக்கத்துல இருக்கறவங்கள்ல்லாம் வேற எல்லாரும் கேட்பாங்கசார் ஃபிரண்டு வருவாருன்னீங்க. வரவேயில்லியேன்று..’

“இது கவலையா ஒனக்கு இந்த வாரம் அவரு லீவு போட்டுட்டாராம். அடுத்த வாரம் கட்டாயம் வந்துடு வாருன்னு” சொல்லு.


“ஆமா எல்லாம் உங்களுக்கு கிண்டல்தான்”.

“கிண்டல் என்னா கெடக்குது இதுல. சீரியசாவே தான் சொல்றேன். அடுத்த வாரம் கட்டாயம் வந்துடு வார்னு சொல்லு” என்று இவன் வேப்பமரம் பக்கமே பார்த்துக் கொண்டிருந்தான். கிராப் தலைச் சிறுமி சில்லை நெற்றியில் வைத்து அண்ணாந்து கண்களை மூடி “ரைட்டா ரைட்டா” என நம்பிக்கை இழக்காமல் நடந்து கொனடிருந்தாள்.

முனைப்பு

(சிறுகதை)

அழைப்பிதழைப் புரட்டி நிகழ்ச்சி நிரலைப் பார்த்துக் கொண்டிருந்தவன் மாநாட்டுக்குச் செல்வதா வேண்டாமா என்றுயோசித்துக்கொண்டிருந்தான். காரியத்தில் ஒன்றுமில்லாமல் சடங்கு போல வெறும் மாநாடாக நடத்திக் கொண்டிருப்பதிலோ, வேண்டுதல் மாதிரி சும்மா அதற்குப் போய் வந்து கொண்டிருப்பதிலோ என் பயன் என்பது இவனுக்குக் கேள்வியாயிருந்தது. என்றாலும் நண்பர்களின் வற்புறுத்தலுக்கு இணங்க போய் வருவது என்று முடிவு செய்து கொண்டான்.
சுற்றிலும் மரங்கள் அடர்ந்த மைதானத்தின் நடுவில் திருமணக் கூடம் போல் அமைந்திருந்த அரங்கில் மாநாடு ஏற்பாடு செய்திருந்தார்கள். முகப்பிலேயே “தமிழ் இன உணர்வாளர்களே வருக! வருக!” என்கிற பதாகை வரவேற்க எங்கு பார்த்தாலும் தமிழ் உரிமை சார்ந்த முழக்கங்கள் கோரிக்கைகள்.
அறிமுகப்பட்ட முகங்களைப் பார்த்து வணக்கம் சொல்லி புன்முறுவல் பூத்து நலன் விசாரிக்க, எழுச்சிப் பாடல்களுடன் தொடங்கிய மாநாடு, வழக்கமான வரவேற்புரை, சிறப்புரை, தலைமையுரைக்குப் பின் கருத்தரங்க நிகழ்சசிகளால் களை கட்டி கரவொலிகளால் அரங்கை அதிர வைத்துக் கொண்டிருந்தது.
நண்பகல் இடைவேளை அறிவிப்பிற்குப் பின் மாநாட்டுப் பந்தலியே வழங்கப்பட்ட உணவுப் பொட்டலங்களை நண்பர்களுடன் வாங்கி வைத்துப் பிரித்து மரத்தடியில் அமர்ந்தவன் சாப்பிட்டபடியே உரையாடிக் கொண்டிருந்தான்.
“அதே போச்சாளர்கள் அதே பேச்சு, இப்படி மாநாடகவே நடத்திக்கனு இருந்தா எப்பதான் இதுக்கு விடிவுகாலமோ...” என்றார் ஒரு நண்பர்.
“நம்மகிட்ட என்னா செயல் திட்டம் இருக்கு அத நடைமுறைப்படுத்த, அது இல்லாதவரைக்கும் சும்மா வாயாலியே பேசிக்னு இருக்க வேண்டியதுதான்” என்றான் இவன்.
“செயல்திட்டம் அப்புறம் இருக்கட்டும், மொதல்ல இந்த நிகழ்ச்சில கலந்துக்னு பேசறவங்க மாநாட்டுக்கு வந்து இருக்கறவங்கல்லாம் அவங்கவங்க கொழந்தைகள தமிழ் வழில படிக்க வச்சா போதும் தமிழ் தானா வளர்ந்துடும” என்றார் இன்னொரு நண்பர்.
“நல்லா சொன்னீங்க. இவ்வாளோ பேரு எங்கெங்கியோ இருந்து எவ்வளவோ செலவு பண்ணிக்னுவர்றம் வந்து புதுசா என்னா தெரிஞ்சிக்னு போறம். ஊருக்குப் போய் புதுசா என்னா செய்யப் போறம். எல்லாம் பழையகதைதான்” என்றார் முதலில் ஆரம்பித்தவர்.
“அதுக்காகவா மாநாட்டுக்கு வர்ரம். வந்தா எல்லாரையும் ஒருசேர சந்திக்கிறதுக்கு ஒரு வாய்ப்பு. அதத் தாண்டி வேஎன்ன..?” என்றான் இவன்.
ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன முதன் முதலாக தமிழ் மொழி சார்ந்த பல கருத்துக்களை இவன் அறிய நேர்ந்தபோது அதன் நியாயம் இவனை மிகவும் கவர்ந்தது. இவ்வளவு காலம் இதை அறியாமல் போயிருந்து விட்டோமே, எப்படியெல்லாமோ வாழ்ந்துவிட்டோமே என்று அதற்காக வருத்தப்பட்டான். என்றாலும் சரி போனது போகட்டும் இனியாவது இதுபடியே நடந்துகொள்வோம் இது படியே வாழ்வோம் என்று முடிவு செய்து கொண்டான்.
ஆனால் முடிவு செய்யும்போது தெரியாத சங்கடம் அதை நடைமுறைப்படுத்தும் போதுதான் தெரந்தது. எல்லோரும் ஒரு விதமாய் இருக்க தான் மட்டும் வேறு விதமாய் இருப்பது போல் தோன்றியது. பேசுவதில் உள்ள சிரமம் ஒரு புறம் இருக்க மற்றவர்களுக்கு அதைப் புரிய வைப்பதில் உள்ள சிரமம் கூடுதலாக இருந்தது.
முதல் அனுபவம் இவனுக்கு நன்றாகவே ஞாபகத்தில் இருந்தது. சென்னை தியாகராயர் நகரிலிருந்து பாரிமுனை செல்லும் பேருந்து எறியவன் தன் கொள்கையை நடைமுறைப்படுத்து முகமாக முத்திய தொடர் வண்டி நிலையம் ஒண்ணு என்றான். நெரிசலில் பயணச்சீட்டுத் தந்து வந்து கொண்டிருந்த நடத்துநர் ‘கள்’ ளென்று ‘எங்க’ என்றார். இவன் சுற்று முற்றும் பார்த்து திருதரு வென்று விழித்து, மேற்கொண்டு நத்துவனரின் பொறுமையைச் சோதிக்க விரும்பாமலோ அல்லது அதற்கான மனத்திண்மை இல்லாமலோ லேசாய் முகம் சுருக்கி ‘சென்ட்ரல் ஒண்ணு’ என்றான்.
முதல் முயற்சியே இப்படித் தோலவியில் முடிந்தது இவனுக்கு சோர்வைத் தந்தாலும் இதற்கெல்லாம் தயங்கி ஏற்றுக் கொண்ட கொள்கையை விட்டு விடக் கூடாது என்று முடிவு செய்து கொண்டான். என்றாலும் ஒவ்வொரு முறையும் பேருந்தில் பயணம் செய்ய நேரும் போதெல்லாம் போக வேண்டிய இடத்தைத் தமிழிலேயே சொல்லிக் கேட்பதா இல்லை ஆங்கிலத்திலேயே கேட்டு விடுவதா என்பது கேள்வியாய் இருக்கும். இரண்டில் எதைச் சொன்னாலும் ஒன்றாயிருக்கும் இடங்கள் பற்றிப் பிரச்சினையில்லை. ஆனால் தமிழில் ஒருபெயரும் ஆங்கிலத்தில் ஒரு பெயருமாயிருக்கிற இங்கள் பற்றி வரும்போது தான் பிரச்சினை என்பதால் எதில் கேட்பது என்று மனதுக்குள் போராடுவான். தமிழில் கேட்பதிலுள்ள சங்கடங்களை உத்தேசித்து பேசாமல் ஆங்கிலத்திலேயே கேட்டுவிடலாமா என்றும் சபலம் தட்டும். கொள்கை இடிக்க, என்னவானாலும் சரி தமிழிலேயே கேட்பது என்று உறுதி எடுத்துக் கொண்டு நடத்துநருக்கு எந்த சந்தேகமும் எழாத வகைக்கு முதல் கேட்பிலேயே தெள்ளத் தெளிவாய்ப் புரியும் வகையில் போகவேண்டிய இடத்தைத் திருத்தமாகச் சொல்வான்.
சில நடத்துநர்கள் ஒரு விநாடி நிதானித்துப் புரிந்து கொண்டு சீட்டைக் கிழித்துத் தந்து விட்டுப் போய் விடுவார்கள். சிலர் முகத்தைச் சுளித்து மறுபடியும் ‘எங்க’ என்பார்கள். இவன் உறதி தளரக் கூடாது என்பதற்காக முதலில் சொன்னதையே மறுபடியும் கூடுதல் அழித்தத்தோடு சொல்வான். நடத்துனர் சற்று நிதானித்து ஒரு மாதிரியாகப் பார்த்துவீட்டு சம்பந்தப் பட்ட இடத்திற்கு உரிய பெயரை ஆங்கிலத்தில் சொல்லி ‘அங்கேயா’ என்று கேட்பார் இவன் தலையை மட்டும் ஆட்டி ‘ஆமா’ என்பான்.
எப்போதாவது தானியில் ஏற நேர்ந்தாலும் இதே சிக்கல்தான். தெரிந்த இடமானால் தானிக்காரர் அவராகவே உரிய இடத்துக்குக் கெண்டு போய் விட்டு விடுவார். புரிய இடம் என்று வந்தால் இவன் பின்னால் அமர்ந்து வழிகாட்டிச் செல்வான். இவன் இடது புறம் என்றால் தானிக்காரர் வலது புறம் திரும்புவார். வலது புறம் என்றால் இடது புறம் திரும்புவார். கேட்டால் ‘நீங்கதான சார் சொன்னீங்க’ என்பார். பிறகு அவருக்கு ‘இடது, வலது’ பற்றி ‘பீச்சக் கை’, ‘சோத்துக் கை’ யில் தொடங்கி ‘லைஃப்ட் ரைட்டை’ அதோடு பொருத்தி விளக்கம் தந்து வகுப்பு எடுத்துக் கொண்டே போய் இறங்க வேண்டும். அடுத்து வேறு ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் அவரே தான் கிடைப்பார் என்பதற்கும் எந்த உத்திரவாதமுமில்லை. அடுத்தமுறை வேறு ஒருவர். அப்புறம் அவருக்கும் வகுப்பு என்று தானிக்காரர்களுக்கான கொள்கைப் பரப்புரை தொடரும்.
வானங்களில் செல்ல நேரும் போதுதான் இந்தப் பிரச்சினை என்றால், நடந்து செல்லும் போதாவது கொள்கைப் பிடிப்போடு நடந்து கொள்ள முடிகிறதா என்றால் அதுவும் இல்லை. யாரையாவது வழி கேட்டாலோ, யாருக்காவது வழி சொல்ல நேர்ந்தாலோவும் இதே பிரச்சினைதான். ஒருமுறை நாடகம் ஒன்றைப் பார்ப்பதற்காக அண்ணா நகர் மேற்கிலிருந்து வர நேர்ந்த போது எழும்பூர் அருங்காட்சியகம் போன எந்தப் பேருந்து என்று இவன் பலபேரைக் கேட்டும் எல்லோரும் புரியாத மாதிரித் தலையாட்ட கடைசியில் ‘எக்மோர் ம்யூசியம்’ என்று கேட்டுத் தெரிந்துகொண்டு வந்து சேர்ந்தது. அப்புறம் திருவல்லிக்கேணியில் ‘மீர்சாஹிப் சந்து எந்தப் பக்கம்’ என்று கேட்டவருக்கு இவன் ‘இப்படியே நேராபோனா ஒரு பேருந்து நிறுத்தம் வரும். அங்கிருந்து எடது பக்கமாகவே பார்த்துக்னு போனா ஒரு பெரிய மருத்துவமனை தெரியும். அதைத் தாண்டி கொஞ்சதூரம் போனா ஒரு வணிக வளாகம் வரும். அதுக்கு நேர்எதிர்த்தாற்போல. இருக்கற தெருவுல நடந்தா வலது பக்கம் ஒரு அடுமனை. அதுவும் பக்கத்துல இருக்கிற சந்துதான் மீர்சாஹிப் சந்து’ என்று சொல்ல, ஏதோ வேற்று கிரகத்து மனிதனைப் பார்த்து மாதிரிப் இவனைப் பார்த்து விட்டுச் சென்றார்.
தொலைபேசி எண்களைத் தெரிவிக்கும் போதும் இதே சிக்கல் தான். புதிய எண்களை அறிய நேரும்போது கவனமாக அதைத் தமிழில் சொல்லிப் பதிய வைத்துக்கொள்ள முடிகிறது. என்றாலும் எற்கெனவே மனதில் பதிந்து வைத்திருக்கும் பழைய எண்களை யாராவது கேட்டால் அதை ஆங்கிலத்தில் நினைவு கூர்ந்தே தமிழ்ப் படுத்திச் சொல்ல வேண்டியிருக்கிறது. டுஃபோர் த்ரி சிக்ஸ், இருவத்தி நாலு முப்பத்தாறு, செவன்ஃபல் நைன் எயிட் எழுபத்தஞ்சி தொண்ணூத்தெட்டு இப்படி.
அமைப்புத் தோழர்கள் தூரத்து நண்பர்கள் முன்பின் அறிமுகமில்லாத தவர்களிடம் எப்படியோ தொலைகிறது என்று பேசிக் கொள்கையை நிலைநாட்டி விடுகிறோம் என்றா ஞவட்டில் வாயைத் திறக்கவே கூச்சமாக இருக்கிறது. தொடக்கத்திலிருந்தே இப்படி இருந்து விட்டிருந்தால் பிரச்சினையில்லை. இவ்வளவு காலம் ஒரு மாதிரி பேசிவிட்ட இப்போது போய் எல்லாவற்றையும் மாற்றிக்கொள்வது என்றால் மாற்றிக் கொள்வதில் நமக்குத் தயக்கம் இருப்பது ஒருபுறம், மாற்றினால் பையன் என்ன ரு தினுசாகப் பேசுகிறானே என்று நினைப்பாதர்களோ என்கிற சங்கடம் மறுபுறம், எதையுமே பேச விடாமல் அல்லவா தடுக்கிறது. அம்மாவிடம் போய் ‘அம்மா சிற்றுண்டி கொண்டு வா’ என்றோ ‘இந்த மாதத்தொலைபேசி கட்டணச் சீட்டு வந்ததா’ என்றோ எப்படிப் பேசுவது இதனாலேயே வெளியில் நிகழ்த்தும் கொள்கைப் பரப்பலை வீட்டுக்குள் நிகழ்த்த முடியாமல் வாயிற் படியிலேயே அதறகு வேலி கட்ட வேண்டியதாகி விடுகிறது.
இப்படிப்பட்ட சங்கடங்கள் நேரும்போது, தன் சொந்த மொழியில் பேசவே எவனாவது கூச்சப்படுவானா, தன் தாய்மொழியில் பேசுவதையே, தன் தாய்மொழியில் பேசுவதையே எவனாவது கேலியாக நினைப்பானா, உலகில் வேறு எந்த மொழியிலாவது இப்படி ஒரு நிலை இருக்குமா என்று கேட்டுக் கொள்வான். இங்குமட்டும் ஏன் இந்த அவலம் இதற்கெல்லாம் யார் காரணம் எது காரணம் என்று யோசிப்பான். முந்தைய தலைமுறை மீது இவனுக்கு கோபம் வரும். சிறு குழந்தையிலிருந்தே இப்படிப் பேசவைத்துப் பழக்கிவிட்டிருந்தால் எந்தப் பிரச்சனையுமில்லை. உரிய காலத்தில் உரியதைச் சொல்லிப் பயிற்றுவிக்காமல் அப்போதெல்லாம் துங்கிக் கிடந்துவிட்டு இப்போது வந்து இதைப் பற்றிப் பேசினால்.. பேசுவது என்ன அவ்வளவு எளிதாகவா இருக்கிறது. இயல்பாய் வரும் பழைய மொழியைத் தவிர்த்து ஒவ்வொன்றையும் நினைத்து நினைத்துப் பார்த்துஅதுஅதற்கும் உரிய தமிழ்ச் சொல்லைக் கண்டுபிடித்துப் பேசுவது என்றால், கொஞ்சம் எச்சரிக்கைக் குறைவாய் இருந்தாலும் பழைய சொல்தானே முந்தித் துருத்திக் கொண்டு வருகிறது. ஐந்தில் வளைக்காமல் ஐம்பதில் வளைக்கும் முயற்சியாக அல்லவா இருக்கிறது.
சில மாதங்களுக்கு முன் நண்பர் ஒருவரது இல்லத்துக்குச் சென்ற இவன் நினைவுக்கு வந்தது. அறுபது வயதை நெருங்குபவர். ஒரு முப்பது ஆண்டுகளுக்கு மேலாகப் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு சமீபம் எழெட்டு ஆண்டுகளாகத் தமிழ் தமிழினம் என்பதில் ஈடுபாடு கொண்டு அதற்காகக் குரல்b காடுத்து வருபவர்.
நண்பரோடு உரையாடிக் கொண்டிருக்கும் போதே அவரது பேரக்குழந்தை வந்து அவரது மடியில் உரசியது. சுமார் ஒண்ணரை வயது இருக்கும்.
குழந்தையைத் தூக்கி மடியில் வைத்துக் கொண்ட அவர் ‘மாமாவுக்கு வணக்கம் சொல்லு’ என்றார்.
புதிய மகம் என்பதால் சற்று நேரம் உற்றுப் பார்த்து பின் இரண்டு கைகளையும் பின்னி ‘ம்ணக்ம்’ என்று மழலையில் மொழிந்தது குழந்தை.
நண்பரது முகத்தில் ஒரே பூரிப்பு. தான் பழக்கி வைத்த பிராணிகள் சொன்னதைச் செய்யும் போது பழக்யிவர் முகத்தில் ஒரு பெருமிதம் பொங்குமே அதைப் போல.
இவனுக்கும் மகிழ்ச்சிதான் பரவால்ல. எல்லார் வீட்லியும் மாமாவுக்கு சூட்மார்னிங் சொல்லுன்னு தான் பழக்கப்படுத்தி வச்சிருப்பாங்க. நீங்க வணக்கம் சொல்லிப் பழக்கி வச்சிருக்கீங்க என்றான்.
‘ஆனா இதுமட்டும் தான் தமிழ். மற்றதெல்லாம் இன்னும் ஆங்கிலம் தான்’ என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் அவர்.
‘என்ன’ என்றான். ‘பாருங்க’ என்று அவர் பக்கத்தில் குறுமேசையில் கிடந்த செய்தித்தாளைக் காட்டிக் குழந்தையிடம் “இது என்னா பா’ என்றார். குழந்தை “பேப்ப” என்றது. “அது” “டி.வி”, “அதோ அது” லேடியோ”, இது “அலோ” தொலைபேசுவது போல காதருகில்கையை வைத்துக்காட்டியது “அதோ தெரியுமே அது” “லேய்ட்” “தோ மேல சுத்துதே அது” “பேன்”.
இப்படி பல, பொருள் பார்த்து பெயர் சொல்லல்களுக்குப் பிறகு வேறு சில வினாக்கள்” அதோ தெரியுதே அது என்னப்பா” “லோடு” “ரோடுல என்னப்பா வரும்” “லாலி”, “அப்பறம்” “பச்சு”, “பஸ்ஸுல என்னப்பா குடுப்பாங்க” “டிக்க” “வானத்துல பறக்குமே அது” “ஏபளேன்”, “தாத்தா கூட சாயங்காலத்துல என்ன போவீங்க” “வாக்கி”, “மாமா கூட கடைக்கி போலுங்க “சேக்கிள்”, “பல்லு எதால தொலைக்குவ” “புச்சு’, “என்னா போட்டு வெளக்குவ” “பேஸ்ட்”.
இவன் பொறுமையிழக்க அவரே குறுக்கிட்டு சொன்னார் நம்ப - குடும்பங்கள்லேயே இப்பிடி இருக்குதுன்னா அப்பறம் மத்த சாதாரணக் குடும்பத்து கொழந்தைகங்களப் பத்தி சொல்லவே வேண்டியதில்லை என்றார்.
இவன் ஏன் அப்பிடி என்றான்.
‘என்ன செய்யறது, நான் ஒருத்தன் மட்டும் தமிழ்ல சொல்லிக்குடுத்துட்டா போதுமா, ஊட்டுல இருக்கற மத்தவங்களும் அதுவும் ஒத்துழைப்பா இருக்க வேணாமா, அவங்க ஒண்ணாச் சொல்லி நான் ஒண்ணச்சொன்னா கொழந்தைக்கு என்ன புரியும். கொழப்பம்தான் வரும்.
‘ஏன் ரெண்டையும் சொல்லிக் குடுக்கறது’ என்றான்.
‘குடுக்கலாம், அதுக்கு இன்னும் வயசு போதாது. வளரட்டும் அப்பறமா பாத்துக்கலாம்னு உட்டுட்டேன்’ என்றார்.
அதை இவன் நண்பர்களிடம் சொல்லி மொதல்ல நம்பளப்போல உள்ளவங்க நம்ப வீட்ல தமிழ்ல பேசணும், கொழந்தைகளுக்கு தமிழ் சொல்லிக்கொடுக்கணும். அப்படி இல்லாம நம்ப தேழர்களே இன்னம் ‘கமிட்டி, கன்சல்ட், டிஸ்கஷன், டிபேட், ட்ரையின், டிக்கட், ரிசர்வேஷன், கோட்டான்னு பேசின்னு இருந்தா அப்பறம் தமிழ் எங்கிருந்து வளரும். இப்ப கூட நாம்ப எழுந்துவரும் போது நான் நாற்காலயீயல் உட்காந்துக்னு இருக்கேன். ஒரு தோழர் கடந்துபோறார். அவர் கால் எம்மேல பட்டுடுச்சி சாரி தோழர்ன்னு தான் சொல்லிட்டுப் போறார். ஏன் “மன்னிக்கவும் தோழர்’ வந்தறேன் தோழர்னு சொல்றது இப்படி சொல்றதுக்கு மொதல்ல ஒரு மாதிரியாத்தான் இருக்கும். பழகிட்டா சரியாப் போவுது. ஏன் முன்ன ‘தாங்க்ஸ்’ சொன்னவங்க இப்ப ‘நன்றி’ சொல்லல. இப்ப நன்றி சகஜமாயிடலியா அதுமாதிரித்தான் இதுவும் என்றான் இவன்.
எல்லோரும் சாபபிட்டு முடித்து இலையை மடித்து விரல்களை அதிலேயே துடைத்துக் கை கழுவ குழாய் பக்கம் நோக்கித் திரும்ப அப்பகுதியில் கூட்டாயிருப்பதைப் பார்த்து ஒரு நண்பர் சொன்னார். ‘இருங்க தோழர் நான் போய் வாட்டர் பாட்டல்ல தண்ணி புடிச்சின்னு வந்துடறேன். இப்பிடியே கழுவிக்கலாம்’ என்றார்.
“பார்த்தீங்களா ‘வாட்டர் பாட்டல்’ என்றான் இவன். ‘தண்ணி பாட்டல்’ னு சொல்றது.”
‘தண்ணி பாட்டல்னா வேறு அர்த்தம் வரும் தோழர்’ என்றார் ஒருவர்.
‘எல்லாம் பழக்கம்தான்’ என்றார் மற்றொருவர்.
“வாட்டருக்கு ண்ணீன்ட்டீங்க, பாட்டலுக்கு..”
“பாட்டலுக்கு புட்டி, குப்பி, சீசான்னு பலது இருக்கு. நாம்ப ‘தண்ணீர் புட்டின்னு’ சொல்லலாம்” என்றான்.
‘நல்லாத்தான் இருக்குது பழக்கப்படுத்திக்னா சரியாயிடும்...”
“சரி வாட்டர் பாட்டிலுக்கு இப்பிடி சொல்லிடறம். மினரல் வாட்டருக்கு என்ன சொல்லுவீங்க” என்றார் நண்பர்.
“மணி நீர்னு சொல்லலாம் மணின்னா தமிழ்ல அருமையான சிறந்த, உயர்வானன்னு பல பொருள் இருக்குது. தண்ணியில் தூய்மை கருதி அதை மணின்னு சொல்லலாம். அது உடன்பாடா இல்லன்ன நேரடியாவே கனிம நீர்ன்னு சொல்லிடலாம். கனிமம்னா மினரல்தான்”
“ஆனா அதுக்காக எலலாத்தியும் வலுக்கட்டாயமா தமிழ்ப் படுத்தி செயற்கையா பண்டிதத் தமிழா பேசனம்னு நான் சொல்லல. முடிஞ்சத ஏற்கெனவே தமிழ்ல அறிமுகமாயி பழக்கப்பட்டு வந்ததையாவது பேசலாமில்லியா அதத்தான் சொல்றேன்” என்றான்.
‘ஆனா எதப் பேசனாலும் உட்டுக்கு வெளியேதான் வச்சிக்கணம். ஊட்டுல போய் இந்த மாதிரியெல்லம் பேசனா நம்பள மெண்டல்ன்னுதான் நெனைப்பாங்க”
“அப்ப ஊருக்குத் தான் தமிழ் ஊட்டுக்கு இல்லண்றீங்களா” என்றான் இவன்.
“உங்களுக்கு இன்னும் மேரேஜ் ஆவல தோழர் அதனால தைரியமா பேசறீங்க” என்றார் நண்பர்.
“பாத்தீங்களா. பழையபடியே மேரேஜ். ஏன் திருமணம்னு வரமாட்டன்னுது.”
“பழக்கம் தான்”
‘இந்தப் பழக்கத்தத்தான் மாத்தனம்ன்றேன்’ என்றான்.
‘சரி, இந்த வாதத்த உடுங்க. புக்ஸ்டாலுக்கா ஒரு ரவுண்ட் போய்ட்டு வருவம். புது புஸ்தகம் எதுனா வந்திருக்குதா பாப்பம் என்றார்” நண்பர்.
இவன் நண்பரைப் பார்த்து முறைத்தான்.
நண்பர் சிரித்து “என்னா புக்ஸ் டாலா..” என்றார்.
“ஏன் நூற்கூடம், நூல் அரங்குன்னு சொல்றது எதுவுமில்லைன்னா சாதாரணமா புத்தகக் கடைன்னு சொல்லிட்டுப் போறது”
இப்பிடியெல்லாம் பார்த்தா வாயையே தெறக்க முடியாது தோழர் என்றார் அவர்.
இவன் ஏதோ பதில் சொல்ல எல்லோரும் பேசிக் கொண்டே நூற்கூடத்தை அடைந்தார்கள்.
“மொதல்ல முன்னோடிகளா இருக்கிறவங்க அவங்கவங்க ஊட்ல அவங்கவங்க கொழந்தைகளுக்குத் தமிழ் சொல்லிக் கொடுக்கணும் அதுங்கள தமிழ்ல படிக்க வக்கணம். அத உட்டுட்டு ஊர்ல இருக்கறவங்க ஊட்டு கொழந்தைங்களுக்குத்தான் தமிழ். தன் உட்டுப் புள்ளைங்களுக்கு மட்டும் கான்வெட்டுன்னா தமிழ் எங்க உருப்படும்” என்றார் நண்பர்.
எல்லோரும் அப்படியிருக்காங்கன்னு சொல்ல முடியாது தோழர். சிலபேர் அப்படியிருக்கறாங்க கன்றதுக்காக எல்லாரையும் கொற சொல்ல முடியாது”
“அதுகூட அவங்க என்னா காரணம் சொல்றாங்க தமிழ் வழில படிக்க வக்ய நல்லதரமான பள்ளிக்கூடம் இல்ல. அதனாலதான் நாங்க ஆங்கில வழிப் பள்ளிக் கூடத்துக்கு அனுப்ப வேண்டியதா இருக்குதுன்றாங்க”
“இதெல்லாம் சும்மா ஒரு சாக்கு தோழர் எல்லாரும் இப்பிடிப் பேச ஆரம்பிச்சா அப்பறம் இதுக்கு எப்பத்தான் விமோசனம்”
“ந;ல்ல தரமான பள்ளிக் கூடங்கள் பெருகணம்”
“தானா எப்படிப் பெருகும். நாமதான் அதப்பெருக வக்யணம்.”
“பள்ளிக்கூடங்கள் பெருகனா மட்டும் போதாது தோழர். ஊட்டுல இருக்கறவங்க மனோபாவமும் மாறணம். இவரு தமிழ்ப் பற்றாளரா இருப்பாரு. ஊட்டுலு இருக்கறவங்க இவர ஓரங்கட்டி வச்சிட்டு அவங்க வேலையப் பாப்பாங்க. கேடட்h நீங்க உருப்படாமப் போனது போதும் புள்ளைங்களையாவது உருப்பட உடுங்கன்னு அவரை வாயடைப்பாங்க. இப்பிடி இருந்தா அப்பறம் தமிழ் எப்பிடி உருப்படும்.”
“இதனாலதான் பல குடும்பங்கள்ள இவரு பெரிய தமிழ்ப் பற்றாளரா இருப்பாரு, இவரு புள்ளைங்க பேரப்புள்ளைங்கள்லாம் கான்வென்ட்ல படிக்கும், கேட்டா குடும்பச் சூழல்ன்னு வாரு. குடும்பத்துலியே செல்வாக்கு செலுத்த முடியாதவரு அப்புறம் சமூகத்துல எப்பிடி செல்வாக்கு செலுத்த முடியும்ங்
“சிலபேர் குடும்ப சூழல் சிக்கலாத்தான் இருக்கும் தோழர். அதுக்காக ஊட்ட திருத்த முடியாதவர் ஊரத்திருத்த முடியாதுன்ற வாதத்த வைக்க முடியாது. அவரால மத்தவங்க திருந்தலாம் இல்லியா?”
“எதாருந்தாலும் மொதல்ல தமிழன் அவங்கவங்க ஊட்டுல தமிழ் பேசற துணிச்சலோட இருக்கணம். தமிழன் கூச்சலோட இருக்கணம். தமிழன் கூச்சப்படாம ஊட்டுல தமிழ் பேசி குடும்பத்தாரையும் எப்ப அப்படி பேச வக்யறானோ அப்பதான் தமிழ் உருப்படும்.”
“நல்ல சொன்னீங்க” என்றார் இன்னொரு நண்பர்.
உணவு இடைவேளை முடிந்து பிற்பகல் கவியரங்கம், பொது அரங்கம், நடக்க இருப்பதையும் முன்னதாக காலை நிகழ்ச்சிகள் தொடங்க இருப்பதாகவும் ஒலி பெருக்கியில் தெரிவித்த அறிவிப்பு ஆங்காங்கே வெளியே நின்று கொண்டிருக்கும் தோழர்களை அரங்கிற்குள் வந்து அமருமாறு கேட்டுக்கொண்டிருந்தது.
“சரி போய் உக்காருவம் தோழர்” என்றான் இவன்.
எல்லோரும் உள்ளே சென்று ஏற்கெனவே அமர்ந்திருந்த இடத்தை நெருங்கினர். இவர்கள் அமர்ந்திருந்த இருக்கைக்குப் பக்கமாக தூரத்து நண்பர் ஒருவரைக் காண இவன் அவரை நெருங்கினான். நண்பர் இடைநிலை ஆசிரியர். தமிழ்ப் பற்றாளர். துணைவியாரும் அப்பிடியே. இலக்கிய இளம்கலைப் பட்டம் முடித்துப் பணி வாய்ப்பைத் தேடிக் கொண்டிருப்பவர். ஆசிரியர் மற்றவர்கள் மாதிரி இல்லாமல் வீட்டிலும் தமிழ் பேசினார். எப்போதாவது அவர் இல்லம் போனால் அவர் துணைவியாரும் தமிழ் பேசுவதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கும். நமக்கும் இப்படியே வாய்த்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைத்துக் கொள்வான். அல்லது இதுபோன்ற வராகத்தான் பார்த்து முடிக்க வேண்டும் என்று நினைப்பான். முதல் வகுப்புப் படிக்கும் ஒரே பையனுடன் குடும்பத்தோடு வந்திருந்தார்.
இவன் அவரை நெருங்கி “வணக்கம் தோழர்” என்றான்.
சட்டென்று திரும்பிய அவர் பதிலுக்கு வணக்கம் வைத்து “வாங்க வாங்க எப்ப வந்தீங்க” என்று வரவேற்க துணைவியாரும் பையனும் வணக்கம் வைத்து “வாங்க” என்றனர்.
இவன் தான் வந்த விவரத்தைச் சொல்லி “நீங்க எப்ப வந்திங்க, முற்பகல் உங்களப் பாக்கலியே” என்றான்.
“நிகழ்ச்சி தொடங்கும் போதே வந்துட்டேன் தோழா., முன்பக்கமா உட்கார்ந்திருந்தேன். ஒலி பெருக்கிப் பெட்டி ஒரே இரைச்சல் அதனாலதான் கொஞ்சம் தள்ளி உக்காரலாமேன்னு இங்க வந்துட்டம்” என்றார்.
“உணவெல்லாம் முடிச்சிட்டீங்களா” என்றார். அவரது துணைவியார்
“முடிச்சிட்டம். நீங்க” என்றான். இவன்
“கையோட கொண்டாந்திருந்தோம்” என்றார் அவர்.
இவன் அவரை அறியாத நண்பர்களுக்கு அறிமுகம் செய்து வைத்து அவரது தமிழ் ஆர்வத்தைப் பற்றியும் சொல்ல, நண்பர்கூச்சத்தோடு புன்முறுவல் பூத்துக்கொண்டிருந்தார்.
கலைநிகழ்ச்சிகள் தொடங்க இருப்பதற்கான அறிவிப்புகள் வர இவன் அமர்ந்திருந்த இருக்கைப் பக்கமாகத் திரும்பினான். அங்கு அடையாளத்துக்காக துண்டால் சுற்றி மடித்து வைத்துவிட்டுச் சென்றிருந்த நாளேட்டைக் காணாமல் துண்டு மட்டும் இருக்க சுற்றுமுற்றும் பார்த்துக கொண்டிருந்த இவனை, நண்பர் “என்னா தோழர் தேடறீங்க” என்றார். இவன் தன்னுணர்வின்றியே இயல்பாக “ஒண்ணுமில்யே இங்க பேப்பர்’ வச்சிருந்தேன் காணம்” என்றான். அதற்கு ஆசிரியரின் முதல் வகுப்புப் படிக்கும் மகன் அருகில் அமர்ந்திருந்த யாரையோ கையைக் காட்டிஇவனிடம் சொன்னான் “செய்தித்தாளா. அதோ அவர் எடுத்து வச்சி படிச்சிக்னு இருக்கறார் பாருங்க.”